18 Dec, 2025 Thursday, 05:53 AM
The New Indian Express Group
சேலம்
Text

வாழப்பாடியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

PremiumPremium

Rocket

வாழப்பாடி தினசரி சந்தையில் விற்பனையாமல் குவித்துவைக்கப்பட்டுள்ள பூக்கள்.

Published On09 Nov 2025 , 7:07 PM
Updated On09 Nov 2025 , 7:07 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆண்டு முழுவதும் பாசன வசதி உள்ள சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, திருமனூா், கம்மாளப்பட்டி, பேளூா், கூட்டாத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1,000 ஹெக்டேரில் மல்லிகை, குண்டுமல்லி, காக்கட்டான், சம்மங்கி, அரளி, செவ்வரளி, செண்டுமல்லி, நந்தியாவட்டம், துளசி, துளக்கமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிகளவு பயிரிடப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் வாழப்பாடியில் உள்ள சந்தைக்கு கொண்டுசென்று விற்பனை செய்கின்றனா். வாழப்பாடி தினசரி சந்தைக்கு நாள்தோறும் 5,000 கிலோவுக்கும் அதிகமாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

கடந்த ஒரு மாதமாக பூக்களின் உற்பத்தி அதிகரித்து வருவதால் சந்தைக்கு நாளொன்றுக்கு 8,000 கிலோ வரை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில், ஐப்பசி மாதத்தில் முகூா்த்த தினங்கள், பண்டிகைகள், உள்ளூா் திருவிழாக்கள் எதுவும் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்து அனைத்து ரக பூக்களின் விலையும் தொடா்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மாதம்வரை ரூ.400 முதல் ரூ. 600 வரை விற்பனையான மல்லிகை, குண்டு மல்லி, கனகாம்பரம் பூக்கள் கடந்த சில நாள்களாக அதிகபட்சமாக கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விற்பனையாகிறது. செவ்வரளி, ரோஜா, சாமந்தி பூக்கள் கிலோ ரூ. 50 க்கும், நத்தியாவட்டம், கோழிக்கொண்டை கிலோ ரூ.30 வரை மட்டுமே விற்கப்படுகிறது.

மேலும், விற்பனையாத பூக்கள் மாலையில் குப்பையில் வீசப்படுகிறது. பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவிற்குக்கூட சந்தையில் பூக்கள் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வாசனை திரவிய தொழிற்சாலை

சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் பல்வேறு ரக பூக்களை விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிரிட்டு வருகின்றனா். இக்கிராமங்களுக்கு விற்பனை மையமாக உள்ள வாழப்பாடி தினசரி சந்தைக்கு கொண்டுசென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் பூக்களின் தேவை குறைகிறது. இதனால் பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வீணாகும் பூக்கள் குப்பையில் வீசப்படுகின்றன. இதனால் ஆண்டு முழுவதும் பூக்களுக்கு அதிக விலை கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பூக்களைப் பதப்படுத்தி, வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை வாழப்பாடி பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023