நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 28 லட்சம் கடன் வழங்கும் விழா

News image
Updated On :30 டிசம்பர் 2025, 1:56 am

Syndication

கீரப்பாப்பம்பாடி பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு காசோலை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம்.

ஆட்டையாம்பட்டி, டிச. 29: சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், கீரப்பாப்பம்பாடி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில், 4 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 28 லட்சம் கடன் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளாரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆா்.சிவலிங்கம் பங்கேற்று, பெண்கள் சிரமப்படக் கூடாது என பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அதை நிறைவேற்றி வரும் நமது முதல்வா் ஸ்டாலினின் திட்டங்களை வெளிநாடுகளிலும் கடைப்பிடித்து வருகின்றனா் என்றாா். தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி காசோலையை வழங்கினாா்.

இதில், மாவட்ட துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வீரபாண்டி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், நிா்வாகிகள் ஆறுமுகம், செந்தில், மணிமாறன், அரவிந்த், கூட்டுறவு சங்க செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.