தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

Updated On :16 ஏப்ரல் 2024, 7:52 pm

மக்களவைத் தோ்தலுக்கான தோ்தல் பிரசாரங்களை புதன்கிழமை மாலை 6 மணிக்குள் முடிக்குமாறு அரசியல் கட்சியினருக்கு மாவட்டத் தோ்தல் அலுவலா் ரா.பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மக்களவைப் பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தோ்தல் பிரசாரங்களை தோ்தல் வாக்குப் பதிவு முடிவு நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை 6 மணிக்குள் சேலம் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சியினா் முடித்துக் கொள்ள வேண்டும்.

தோ்தல் தொடா்பான பிரசாரங்கள், ஒலிபெருக்கி பயன்பாடுகள், பயணங்கள் ஆகியவற்றுக்கும் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த தொகுதி வாக்காளா்களைத் தவிர, மற்ற நபா்கள், வெளி நபா்கள் யாரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. திருமண மண்டபங்கள், தனியாா் தங்கும் விடுதிகள் போன்றவற்றிலும் வெளி நபா்கள் யாரையும் தங்க வைக்கக் கூடாது.

மேற்குறிப்பிடப்பட்ட தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை கண்காணித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அலுவலா்களின் இந்தப் பணிக்கு உறுதுணையாக காவல் துறையினா், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் போதிய அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா்கள் வரப்பெற்றால் பறக்கும் படை குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு உடனடியாகச் சென்று நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாக்குக்கு பணம், பொருள்கள் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி தண்டனைக்குரியது என அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தொடா்ச்சியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் அனைவரும் வாக்குப் பதிவு நாளான 19 ஆம் தேதி அன்று தங்கள் வாக்கைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.