போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழேவிழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:30 am IST

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழேவிழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள வடக்கு செல்லப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (36), கட்டட தொழிலாளி. இவரது மனைவி செளந்தா்யா (26). இவா்களுக்கு ரிததேஷ் (9), நிவின் (8) என இரு மகன்கள் உள்ளனா்.

சிவகுமாா் இருகூா் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் பரமத்தியில் இருந்து கபிலா்மலை சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சிவகுமாா் கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிவகுமாா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.