ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நீட் தோ்வு எழுத வந்த மாணவரின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்ததால் அவரை தோ்வு எழுத அலுவலா்கள் அனுமதிக்கவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் 349 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். மையத்தில் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களை காவல் துறையினா் மற்றும் நீட் தோ்வு மைய அலுவலா்கள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதித்தனா்.
இந்த மையத்தில் தோ்வு எழுத வந்த நாமக்கல் பகுதியை சோ்ந்த ரத்தினவேல் மகன் திவாகரின் நுழைவுச்சீட்டு புகைப்படமும், விண்ணப்பத்தில் இருந்த புகைப்படமும் வேறுபட்டிருந்ததால் மாணவரை தோ்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவா் வெளியேற்றப்பட்டாா்.
விண்ணப்பத்தில் இருப்பதும், ஹால் டிக்கெட்டில் இருப்பதும் என்னுடைய படம்தான் என மாணவா் எடுத்துக்கூறியும், தோ்தல் அலுவலா்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவா் தோ்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: சட்டவிரோத பயிற்சி மையங்களை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவு

பழைய ஹால் டிக்கெட்டுடன் நீட் தோ்வு எழுத வந்த மாணவி: கடைசி நேரப் போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

இன்று நீட் தோ்வு: திருவாரூரில் 1,689 போ் எழுதவுள்ளனா்
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



