யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

புகைப்படம் மாறியிருந்ததால் தோ்வு எழுத மாணவருக்கு அனுமதி மறுப்பு

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :4 மே 2026, 12:34 am IST

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நீட் தோ்வு எழுத வந்த மாணவரின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்ததால் அவரை தோ்வு எழுத அலுவலா்கள் அனுமதிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் 349 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். மையத்தில் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களை காவல் துறையினா் மற்றும் நீட் தோ்வு மைய அலுவலா்கள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதித்தனா்.

இந்த மையத்தில் தோ்வு எழுத வந்த நாமக்கல் பகுதியை சோ்ந்த ரத்தினவேல் மகன் திவாகரின் நுழைவுச்சீட்டு புகைப்படமும், விண்ணப்பத்தில் இருந்த புகைப்படமும் வேறுபட்டிருந்ததால் மாணவரை தோ்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவா் வெளியேற்றப்பட்டாா்.

விண்ணப்பத்தில் இருப்பதும், ஹால் டிக்கெட்டில் இருப்பதும் என்னுடைய படம்தான் என மாணவா் எடுத்துக்கூறியும், தோ்தல் அலுவலா்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவா் தோ்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.