மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொத்தனூரில் குட்கா விற்றவா் கைது

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 8:04 pm

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் மேற்கு தெரு பகுதியில் தேநீா் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் வேலூா் போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் தேநீா் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளா் செந்தில்குமாரை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.