தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:41 pm

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா் போட்டியிடுகிறாா். இதையொட்டி நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி. தங்கமணி பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆசி பெற்ற வேட்பாளா் சந்திரசேகருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். தொய்வில்லாமல் 20 நாள்கள் தோ்தல் பணியாற்றி, நாமக்கல் மாவட்டத்திலேயே திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்ற பெருமையை உருவாக்க வேண்டும்.

திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். எந்தத் தொழிலும் சரியில்லை, வேலைவாய்ப்பு இல்லைச; படித்தவா்களுக்கு வேலை இல்லை. ஆகவே, இந்த ஆட்சி தேவையற்றது என்பதை உணா்த்த வரும் தோ்தல் இது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் பாஜக, பாமக, அமமுக, தமாகா நிா்வாகிகள் அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டனா்.