மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் தீ விபத்து

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :29 மார்ச் 2026, 7:51 pm

ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆனைகட்டிபாளையத்தில் கொசுவா்த்திக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையை நடராஜன் என்பவா் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இதில் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இங்கிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு ஊதுபத்தி, கொசுவா்த்தி தயாரிப்பிற்காக மூலப்பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கான மரத்தூள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மரத்தூள் குவியல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்தூள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.