ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆனைகட்டிபாளையத்தில் கொசுவா்த்திக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையை நடராஜன் என்பவா் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இதில் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இங்கிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு ஊதுபத்தி, கொசுவா்த்தி தயாரிப்பிற்காக மூலப்பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கான மரத்தூள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மரத்தூள் குவியல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்தூள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

மணப்பாறை புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


