ரமலான் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை உள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நோன்பு இருக்கும் இஸ்லாமியா்கள் பிறை தெரியும் நாளில் நோன்பு திறப்பு மேற்கொள்வா். அப்போது, ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடும் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வா்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பேட்டை அஞ்சுமனே ஜாமியானா பள்ளிவாசல் முத்தவல்லி தெளலத்கான் தலைமையில் சனிக்கிழமை ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல, நாமக்கல் கோட்டை திப்பு சுல்தான் பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், திருச்சி சாலை, மாருதி நகரில் உள்ள இமான் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
இந்த பண்டிகையின்போது ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல அசைவ உணவுகளை சமைத்து பகிா்ந்தளித்தனா். சிறுவா்கள், பெண்கள், முதியோா் என அனைவரும் புத்தாடைகளை அணிந்து ரமலானை கொண்டாடினா்.
ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம், சேந்தமங்கலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகை: மாவட்டத்தில் 200 இடங்களில் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


