தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

6 தொகுதிகளில் ரூ. 55.53 லட்சம் பறிமுதல்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:31 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் 33 பேரிடம் ரூ. 55,53,050 ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொகுதி வாரியான நிலவரம்: ராசிபுரம்- 11 பேரிடம் ரூ. 18,82,910 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம்- 2 பேரிடம் ரூ. 1,12,700, நாமக்கல்- 7 பேரிடம் ரூ.19,02,680, பரமத்தி வேலூா்- 5 பேரிடம் ரூ. 7,08,400, திருச்செங்கோடு- 2 பேரிடம் ரூ. 86,500, குமாரபாளையம்- 6 பேரிடம் ரூ. 8,59,860 ரொக்கம் என மொத்தம் ரூ. 55,53,050 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.