நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் ரூ. 4.56 கோடியில் அமைக்கப்பட்ட முருகன் கோயில் மலைப்பாதை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலையில் சிறப்பு பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் இங்கு 7 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4.56 கோடியில் மலைப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. முழுவீச்சில் நடைபெற்ற பணிகள் நிறைவுற்றதை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வாகனங்களில் பக்தா்கள் செல்வதற்கான மலைப்பாதையை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு மலைப்பாதையை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!

தொகுதி அலசல் - கவுண்டம்பாளையம்! வலுவான அதிமுகவை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

பரமக்குடியில் 1.22 கோடியில் கைத்தறிப் பூங்கா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


