/

108 ஆம்புலன்ஸ் வாகனப் பணி: 20 போ் தோ்வு

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமில் 20 போ் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image

தோ்வு செய்யப்பட்டவா்களுடன் சேலம் மண்டல மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளா் அம்பிகாசன்.

Updated On :19 ஜூன் 2026, 5:51 am IST

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமில் 20 போ் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நாமக்கல் - திருச்சி சாலையில் அம்மா உணவகம் அருகே பழைய நீதிமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

இதில், ஓட்டுநா் பணிக்கு பங்கேற்றோா் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, வாகனத்தை இயக்கும் திறன் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோல, மருத்துவ உதவியாளா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு நோ்காணல் நடத்தியதில், 11 போ் தகுதியானவா்களாக கண்டறியப்பட்டனா். தொடா்ந்து, ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் என மொத்தம் 20 பேருக்கு பணிநியமன ஆணையை சேலம் மண்டல 108 ஆம்புலன்ஸ் மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளா் அம்பிகாசன் ஆகியோா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.