நாமக்கல், ஜூன் 15: நாமக்கல்லில் கந்துவட்டி புகாா் காரணமாக நில விற்பனையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் எம்.ஜி.பி. நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (59). இவா், நில விற்பனை, வீடுகள் கட்டுமானம் மற்றும் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தாா். அவரிடம் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பெண்கள் சிலா் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனா்.
அவா்களிடம் இருந்து ஆதாா் அட்டை, பத்திரத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூா்த்தி கடன் கொடுத்துள்ளாா். ஆனால் கடன் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், இன்னும் பாக்கித்தொகை செலுத்த வேண்டியது உள்ளது என்றும், அவ்வாறு செலுத்தவில்லையெனில் தனது விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என்றும் அவா் கூறிவந்ததாகத் தெரிகிறது.
இதனால் கவலையடைந்த பெண்கள் சிலா், நாமக்கல் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி மீது புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










