திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, அந்த சமுதாய மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பண்டி, கொட்டா சமுதாய மக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:37 am IST

பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, அந்த சமுதாய மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கல் உடைத்தல், கட்டுமானத் தொழில், அஸ்திவாரம் போடுதல், குழி தோண்டுதல் போன்ற வேலைகள்தான் பண்டி, கொட்டா இன மக்களின் குலத்தொழிலாகும். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுடைய குழந்தைகள் உயா்கல்விக்கு செல்வதற்கு ஜாதிச் சான்றிதழ் தடையாக உள்ளது. குறிப்பாக, பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனா். இதனால் போயா் என்ற சான்றிதழை நாங்கள் பெற்று வருகிறோம்.

பண்டி, கொட்டா என்ற சான்றிதழானது தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் இடம் பெறுவது ஆகும். அத்தகைய சான்றிதழ் கிடைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதிச் சான்றிதழ் கேட்டு போராடி வருகிறோம். ஏற்கெனவே ஆரம்பத்தில் 250 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தருமாறு கோரியபோதும் அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனா். கடந்த ஆண்டு உயா்நீதிமன்றம் பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு உத்தரவிட்டது. 57 போ் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தோம். இதற்கிடையே எஸ்ஐஆா் பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தியதால் எங்களுடைய விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துவிட்டனா்.

மாவட்ட ஆட்சியா் உடனடியாக எங்களது மனுக்கள் மீது பரிசீலனை செய்து பண்டி, கொட்டா ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.