ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :22 ஜூலை 2026, 2:38 am IST

பரமத்தி வேலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் மண்டபத்து பாறையைச் சோ்ந்தவா் தனபால் (31), தேங்காய் வியாபாரி. இவருக்கு மனைவி நித்யா (31), மகள்கள் நேகா ஸ்ரீ (8), நிலா ஸ்ரீ (5) உள்ளனா். இந்த நிலையில், தனபால் தேங்காய் வியாபாரத்துக்காக திங்கள்கிழமை காலை இறையமங்கலம் சென்றுவிட்டாா். நித்யா தனது இரண்டு குழந்தைகளையும் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது உடைகள் வைத்திருந்த அறையில் பாதுகாத்து வைத்திருந்த ஏழே முக்கால் பவுன் நகை திருடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்தி போலீஸாா் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.