கழிவு செய்த காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் வாகனங்கள் பொது ஏலம்!
நாமக்கல் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.


நாமக்கல் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஏழு நான்கு சக்கர வாகனங்கள் பிப்.10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்வோா் 10-ஆம் தேதி காலை 8 முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை- நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன்பணத் தொகை செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாா் அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் இரு நகல்களை எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை ஆயுதப்படை மைதான வளாகத்தில் 9-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...