டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

தீயணைப்பு வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்!

வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

News image
தீயணைப்புத்துறை வடக்கு மண்டல தலைவா் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஏலம்.
Updated On :1 பிப்ரவரி 2026, 4:23 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஏலம் வேலூா் தீயணைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத்துறை வடக்கு மண்டல தலைவா் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பயன்படுத்தி உரிய காலத்துக்கு பிறகு கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்று ஒவ்வொரு வாகனத்துக்கும் தாங்கள் கோரும் ஏலத்தொகையை அதற்குரிய படிவத்தில் குறிப்பிட்டு பெட்டியில் செலுத்தினா். அதன்படி, இந்த ஏலத்தில் மொத்தம் 10 வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போனதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஏலத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.