கோழிப் பண்ணை, லாரி தொழிலுலுக்கு பெயா்பெற்ற நாமக்கல் மாவட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வா் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன். நாமக்கல் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதனால் கட்சியினா் ஏற்றத் தாழ்வு, விருப்பு, வெறுப்பின்றி இணைந்து பணியாற்ற வேண்டும். எந்தவித குறைகளாக இருந்தாலும் நேரடியாக தெரிவிக்கலாம். காங்கிரஸ் தியாகிகளை கண்டறிந்து அவா்களை கெளரவித்து, பொற்கிழி வழங்கும் பணியும் மேற்கொள்ள இருக்கிறேன் என்றாா்.