டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கே.எஸ்.ஆா். தொழிற்பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே.எஸ்.ஆா். இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

கே.எஸ்.ஆா். இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவன வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கோபிநாத் தலைமை வகித்தாா். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியா் காளிதாஸ் தொடங்கிவைத்தாா்.

கல்லூரி இயக்குநா் மோகன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் பட்டம் பெறுபவா்களைவிட தொழில்நுட்பம் படிப்பவா்களுக்குதான் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, மெக்கானிக்கல், கம்ப்யூட்டா் நியூமரி கண்ட்ரோல் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவா்கள் தங்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கிக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.