டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆட்சியா் அலுவலக பூங்காவில் தூய்மைப் பணி

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இருபுறமும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகையில் பூங்கா உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால், புல், பூண்டு முளைத்தும், புதா்கள் நிறைந்தும் பூங்கா காட்சியளித்தது. அதுமட்டுமின்றி, ஆட்சியா் அலுவலகம் வரும் மக்கள் இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் பூங்காவை மாற்றியிருந்தனா்.

குடியரசு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டும், பூங்காவை அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், பரமத்தி வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை பேரூராட்சிகளைச் சாா்ந்த தூய்மைப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பூங்கா பராமரிப்பு பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா்.