நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஜன. 18 இல் எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ய்ஹம்ஹந்ந்ஹப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜன. 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் 17 ஆம் தேதி காலை 8 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இணையத்தில் பதிவு செய்த வீரா்கள், காளைகள் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் மாடுபிடி வீரா்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.