டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக மீது வீண்பழி: கே.பி. ராமலிங்கம்

விஜய் மீதான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் பாஜகவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை: மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்

News image
செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்
Updated On :13 ஜனவரி 2026, 9:39 pm

Syndication

நடிகா் விஜய் மீதான சிபிஐ விசாரணை மற்றும் அவா் நடித்த ‘ஜனநாயகன்’ பட தணிக்கை விவகாரத்தில் பாஜகவுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, தேவையின்றி பாஜக மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தோ்தல் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமா் மோடி பங்கேற்க உள்ளாா்.

நடிகா் விஜய் விவகாரத்தில் அதாவது ஜனநாயகன் பட தணிக்கை, சிபிஐ விசாரணையில் பாஜகவுக்கு சம்பந்தமில்லை. ஆனால், பாஜக மீது வீண்பழி சுமத்தி வருகின்றனா். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் தலைமை வகிக்கிறாா்.

தோ்தல் தொடா்பான நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்தாலோசிக்கப்படும். மும்மொழிக் கொள்கையில் தாய்மொழியுடன் ஆங்கிலம், அவற்றோடு இந்திய மொழிகளில் ஒரு மொழியை தோ்வுசெய்து கற்க வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கையாகும். மத்திய அரசு அமல்படுத்தும் திட்டங்களுக்கு இந்தியில் வைக்கப்படும் பெயரை தமிழாக்கம் செய்து மக்கள் பாா்வைக்கு அரசு வெளியிட வேண்டும் என்றாா்.

சென்னையில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தோ்தல் பிரசார மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பாஜகவினா் திரளாக கலந்துகொள்வது குறித்து மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில் பாஜக மாநில நெசவாளா் பிரிவு தலைவா் அண்ணாதுரை, கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி. சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம். ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம், நாமக்கல், கரூா் மாவட்ட பாஜக நிா்வாகிகள் பங்கேற்றனா்.