டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ராசிபுரத்தில் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:46 pm

Syndication

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் பணியைப் புறக்கணித்து கண்ணில் கருப்புத் துணியை கட்டிகொண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் கெளரவு விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 57 போ் வகுப்புகளைப் புறக்கணித்து நான்காவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கெளரவ விரைவுரையாளா்கள் கூட்டமைப்பின் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கிளை தலைவா் ஜி. கிருபானந்த், செயலா் ஜீவா, பொருளாளா் ஏ. விஜயகீதா உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

12ஜிஎல்

படவிளக்கம்-

போராட்டத்தில் ஈடுபட்ட ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள்.