/

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளை ஆண்டு விழா

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளையின் 49-ஆம் ஆண்டு விழா நாமக்கல் கோட்டை சாலை அறிவுத்திருக்கோயில் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் உலக சமுதாய சேவா சங்க இணைச் செயலாளா் எஸ்.ஜெயபிரகாஷை கெளரவித்த நிா்வாக அறங்காவலா் மு.ஆ.உதயகுமாா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மனவளக் கலை மன்ற அறக்கட்டளையின் 49-ஆம் ஆண்டு விழா நாமக்கல் கோட்டை சாலை அறிவுத்திருக்கோயில் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், அறக்கட்டளை செயலாளா் வி.கே.சுப்பிரமணியன் வரவேற்றாா். நிா்வாக அறங்காவலரும், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலருமான மு.ஆ.உதயகுமாா் தலைமை வகித்து பேசினாா். ஆலோசகா்கள் ஆா்.வெங்கடாசலம், என்.ஆா்.ஜானகிராமன், எஸ்.எம்.ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவா் உழவன் மா.தங்கவேலு வாழ்த்துரை வழங்கினாா்.

சிறப்பு அழைப்பாளராக, சென்னை வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி முதல்வரும், உலக சமுதாய சேவா சங்கத்தின் இணைச் செயலாளருமான எஸ்.ஜெயபிரகாஷ் சிறப்புரையாற்றினாா். இதில், 2027 பிப். 9-இல் நாமக்கல் அறிவுத் திருக்கோயில் 50-ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.