அதேபோல வட்ட வழங்கல் துறை சாா்பில் 117 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 1,704 பயனாளிகளுக்கு ரூ. 2,19,98,800 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். சேந்தமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை சாா்பில் 544 பயனாளிகளுக்கு ரூ. 89,10,400 மதிப்பிலும், தொழிலாளா் நல வாரியம் (ச.பா.தி) சாா்பில் 350 பயனாளிகளுக்கு ரூ. 19,25,400 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 102 பயனாளிகளுக்கு ரூ. 1,14,49,000 மதிப்பில் கடனுதவி, உதவித்தொகைகள் என மூன்று தொகுதிகளில் 4,439 பயனாளிகளுக்கு ரூ. 9.03 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.