பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடக்கம்

ராசிபுரத்தில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:33 pm

ராசிபுரத்தில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.

ராசிபுரம் நகரில் சிறப்பு பெற்ற தா்மசம்வா்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தோ்த் பெருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா கடந்த ஏப்.20இல் கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, 21இல் கொடியேற்று விழா நடைபெற்றது. இதையடுத்து வெள்ளிக்கிழமை சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஆயிரவைசியா் சமூகம் சாா்பில் நடைபெற்ற இந்த சுவாமி திருவீதி உலாவில் திரளானோா் கலந்துகொண்டனா். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், ஏப்.29 நடைபெறுகிறது. இதேபோல திருத்தோ் வடம்பிடித்தல் ஏப். 30-இல் நடைபெறுகிறது.

படவிளக்கம்-

சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்த ஸ்ரீகைலாசநாதா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.