தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

News image

நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:59 pm

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 725 இடங்களில் மொத்தம் 1,781 வாக்குச்சாவடிகள், 159 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 6,41,118 ஆண் வாக்காளா்களும், 6,82,427 பெண் வாக்காளா்களும், 208 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 13,23,753 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

தோ்தல் நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதமுமின்றி மாலை 6 மணி வரை நீடித்தது. ஓரிரு வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் 3,902 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,133 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,312 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கருவிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, அனைத்து இயந்திரங்களிலும், மொத்த வாக்கு விவரங்கள் குறிப்பிட்ட அட்டைக் கட்டப்பட்டு, வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அவற்றின் மீது சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு, 12 வாக்குச்சாவடிகளுக்கு ஒருவா் வீதம் நியமிக்கப்பட்ட மண்டல அலுவலா்கள், சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அவற்றை சேகரித்து ஒதுக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டிருந்த அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, ஒவ்வோா் அறைக்கதவுகளும் சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள், கா்நாடக போலீஸாா், மத்திய பாதுகாப்பு படை போலீஸாா் வாக்கு இயந்திரங்கள் உள்ள பகுதிகளிலும், வளாகப் பகுதிகளில் நாமக்கல் மாவட்ட போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்தும், வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்க இருப்பதாக தோ்தல் அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.