ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

எஸ்.ஐ. மீது தாக்குதல்: திமுக பிரமுகா் கைது

குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:54 pm

குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணியும், திமுக சாா்பில் தொழிலதிபா் செ.பாலுவும் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரம் நிறைவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரமுகா் சஞ்சித் (24) வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் (32) விசாரிக்க சென்றாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதில், உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சித்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.