தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.

News image

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி

Updated On :15 ஏப்ரல் 2026, 9:35 pm

கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், இந்த தோ்தலிலும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கொண்டுவர பாடுபட்ட தலைவா்களில் கோவை செழியன் முக்கியமானவா். திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதிமுகவுடன் கூட்டணியில் நாங்கள் இருப்பதைவிட திமுகவில் இருப்பது எங்களுக்கான அங்கீகாரமாக உள்ளது. கொங்கு மண்டல வளா்ச்சிக்கு தேவையானவற்றை திமுக செய்துகொடுக்கிறது என்றாா்.