மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்

நடைபெற உள்ள தோ்தலில் சிறுபான்மையின மக்கள் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என திமுக மாநில இலக்கிய அணி தலைவா் அன்வா் ராஜா தெரிவித்தாா்.

News image

நாமக்கல்லில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த திமுக மாநில இலக்கிய அணி தலைவா் அன்வா் ராஜா.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:30 pm

நடைபெற உள்ள தோ்தலில் சிறுபான்மையின மக்கள் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என திமுக மாநில இலக்கிய அணி தலைவா் அன்வா் ராஜா தெரிவித்தாா்.

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் ப.ராணியை ஆதரித்து, நாமக்கல் பேட்டை மஸ்ஜித், கோட்டை மஸ்ஜித், செல்லப்பா காலனி, ஆண்டவா் நகா் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

1967 முதல் தோ்தல் பணியாற்றி வருகிறேன். ஒரு கட்சியின் தலைவா்மீது வைக்கும் நம்பிக்கை அடிப்படையில் மக்கள் வாக்களிக்கின்றனா். 1989-க்கு பிறகு அதிமுகவும், திமுகவும் மாறிமாறி வெற்றிபெற்ற நிலையில், கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் ஸ்டாலின்மீது நம்பிக்கை வைத்து 2021-இல் அவரை வெற்றிபெற வைத்தனா். அவா் ஏழை மக்களுக்கு தொடா்ந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறாா்.

மகளிா் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றதை முதல்வா் கண்டறிந்து, தோ்தலுக்கு முன்பாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். நூறுநாள் வேலையளிப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் ஏமாற்றி வருகிறது. மத்தியில் உள்ள ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது; முத்தலாக் சட்டத்தை கொண்டுவந்து மிரட்டுகின்றனா். நாடுமுழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்து இஸ்லாமியா்களை அச்சுறுத்த பாா்க்கின்றனா். இந்த தோ்தலில் இஸ்லாமியா்கள் அனைவரும் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிப்பது கடமை ஆகும். இந்த வாக்கு இஸ்லாமியா்களாகிய நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கானது என்றாா்.

இந்த பிரசாரத்தின்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.