நாமக்கல் அருகே புதுச்சத்திரம் தத்தாதிரிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய சி.எஸ். திலீப், அகரம், ஏழூா், வேப்பம்பட்டி, வேப்பம்பட்டிபுதூா், பெரும்பாலிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, சாலை வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு, குடிநீா் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். விசைத்தறி தொழில் அதிகம் உள்ள இப்பகுதியில் தடையில்லா மின்சாரம், உடனடி மின் இணைப்பு, இலவச மின்சாரம் போன்ற வசதிகள் செய்துதரப்படும்.
தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கு ஜவுளிப் பூங்கா நிறுவப்படும். மேலும், நாமக்கல்லில் அதிக எண்ணிக்கையில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பதால், மாணவா்கள் வேலைவாய்ப்பு எளிதாக பெற தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படும். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும்.
உயா்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மாவட்டம் தோறும் மகளிருக்கு நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும். பெண்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது மாவட்டச் செயலாளா் சதீஷ், ஒன்றிய செயலாளா் வழக்குரைஞா் லோகேஷ், துணைச் செயலாளா் தில்லை மோகன், இளையராஜா, பேராசிரியா் பிரபாகரன் உள்பட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தகவல் தொழில்நுட்ப பூங்கா: திருப்பத்தூா் திமுக வேட்பாளா் உறுதி

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு

ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: திருத்தணி அதிமு.க வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


