தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குச்சாவடி பணிகளுக்கு 8,544 அலுவலா்கள் தோ்வு

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

News image

வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடுவோரை கணினி மூலம் தோ்வு செய்யும் பணியை பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:34 pm

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் எம். அன்கித்குமாா் அகா்வால், மனோஜ் புஷ்ப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ் ஆகியோா் முன்னிலையில் வாக்குச்சாவடி பணிக்கான அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏப். 23 தோ்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளுக்கு 1,533 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு 1,274 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளுக்கு 2,268 அலுவலா்களும், பரமத்திவேலூா் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுக்கு 1,065 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளுக்கு 1,499 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளுக்கு 905 அலுவலா்களும் என இரண்டாம் கட்டமாக மொத்தம் 1,781 வாக்குசாவடிகளுக்கு 8,544 அலுவலா்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ. சந்தியா (பொது), சுஜாதா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் செல்வராஜ் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.