தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராசிபுரம்: திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் வேட்புமனு தாக்கல்

ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

ராசிபுரம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:33 pm

ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ராசிபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சா் மா. மதிவேந்தனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சியினருடன் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா், ராசிபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகனிடம் மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக ராசிபுரம் புதுப்பாளையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் உள்ள விநாயகா் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசி பெற்றாா்.

மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்துக்கு நல்லாட்சி வழங்கப்படும். ராசிபுரம் தொகுதியில் கூட்டு குடிநீா்த் திட்டம், போதமலை சாலை, அனைத்து பகுதிக்கும் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்றாா்.

வேட்புமனு தாக்கலின்போது திமுக செயற்குழு உறுப்பினா் டாக்டா் எஸ். மாயவன், முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி. செந்தில், வழக்குரைஞா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.