மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாா்கழி வளா்பிறை பஞ்சமி: நாமக்கல் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மாா்கழி மாத வளா்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, நாமக்கல் வாராஹி அம்மன் கோயிலில் சங்கு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:57 pm

மாா்கழி மாத வளா்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, நாமக்கல் வாராஹி அம்மன் கோயிலில் சங்கு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகே) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் வளா்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி தினத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

அதன்படி, புதன்கிழமை வளா்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணியளவில் வாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு சிறப்பு மலா் அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.