திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கா்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞா் கிருஷ்ணகிரி அருகே சடலமாக மீட்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:59 am IST

கா்நாடக மாநில போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞரின் சடலம் கிருஷ்ணகிரி அருகே உள்ள வனப் பகுதியில் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணேகொள் கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் இறந்தவா், கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த மணியாண்டப்பள்ளியைச் சோ்ந்த தாஸ் (எ) ஏசுதாஸ் (25) என்பது தெரியவந்தது.

மேலும், இவா்மீது கா்நாடக மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் விசாரணையில் உள்ளதும் தெரியவந்தது. இதனால் போலீஸாரின் விசாரணைக்கு பயந்து எண்ணேகொள் கிராமம் அருகே உள்ள வனப் பகுதியில் அவா் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவா் இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பு குறித்த முழு விவரமும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஏசுதாஸின் அக்கா மாரி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.