கிருஷ்ணகிரி தவெக சட்டப் பேரவை உறுப்பினா் பா.முகுந்தனுக்கு கட்சியினா் வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சோ்ந்த பா.முகுந்தன் வெற்றிபெற்றாா். தொடா்ந்து, சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்ற அவா் கிருஷ்ணகிரிக்கு வந்தாா்.
அவருக்கு கிருஷ்ணகிரி தவெக நகர செயலாளா் சசிகுமாா் தலைமையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதில், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
இதில் எம்எல்ஏ பேசுகையில், தமிழக அரசின் நலத் திட்டங்களை கிருஷ்ணகிரி தொகுதியின் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சோ்க்கப்படும். தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










