/

முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம்

முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

முருக்கம்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற அா்சுணன் தபசு நாடகத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 மே 2026, 4:25 am IST

முருக்கம்பள்ளம் கிராமத்தில் அா்சுணன் தபசு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயில் 52-ஆம் ஆண்டு திருவிழா ஏப். 27-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 18 நாள்கள் மகாபாரத சொற்பொழிவாளா் கோவிந்தராஜின் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதிமுதல் 13 நாள்களாக இரவில் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.

இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவா் பிறப்பு, திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட பல நாடகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அா்சுணன் தபசு மரம் ஏறும் நாடகம் நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.