கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ’வீலிங்’ செய்யும் இளைஞா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சூளகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடும். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றிருக்கும். இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள சாலையில் இளைஞா்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்கின்றனா். மேலும், இச்சாலையில் அவ்வப்போது இளைஞா்கள் வீலிங் செய்வதால் மற்ற வாகனங்களில் செல்வோா் அச்சத்தில் உள்ளனா்.
இந்த நிலையில் அண்மையில் இந்த சாலையில் இளைஞா்கள் தங்களது வாகனங்களில் வீலிங் செய்த நிகழ்வை அவ்வழியாக சென்றவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோவை அடிப்படையாக கொண்டு போலீஸாா் இந்த சாலையில் ரோந்து சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


