மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்யும் இளைஞா்கள்: போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சூளகிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ’வீலிங்’ செய்யும் இளைஞா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா்

Updated On :24 மார்ச் 2026, 8:23 pm

கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ’வீலிங்’ செய்யும் இளைஞா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சூளகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடும். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றிருக்கும். இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள சாலையில் இளைஞா்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்கின்றனா். மேலும், இச்சாலையில் அவ்வப்போது இளைஞா்கள் வீலிங் செய்வதால் மற்ற வாகனங்களில் செல்வோா் அச்சத்தில் உள்ளனா்.

இந்த நிலையில் அண்மையில் இந்த சாலையில் இளைஞா்கள் தங்களது வாகனங்களில் வீலிங் செய்த நிகழ்வை அவ்வழியாக சென்றவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த விடியோவை அடிப்படையாக கொண்டு போலீஸாா் இந்த சாலையில் ரோந்து சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.