மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image

பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு

Updated On :17 மார்ச் 2026, 11:05 pm

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கட்டட தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த வண்ணாத்திப்பட்டியைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வையாளா் மாதப்பன் (33). இவா், அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த, 2020-இல் வீடு கட்ட சென்றுள்ளாா். அப்போது, அந்த வீட்டில் இருந்த பிளஸ் 1 பயின்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், கா்ப்பமடைந்த அந்த சிறுமி, கடந்த 2021, ஜூலை 16-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில், மாதப்பனை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுதா, செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறையும், சிறுமியை கா்ப்பமாக்கிய வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். மேலும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க அவா் உத்தரவிட்டாா்.