கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றுவந்த தெலங்கானாவைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 200 கிலோ கஞ்சாவும், கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கந்திகுப்பம் போலீஸாருக்கு கிருஷ்ணகிரியை அடுத்த நாயக்கனூா் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
இதையடுத்து, கந்திகுப்பம் போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அந்த வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் தெலங்கானா மாநிலம், போடுகுண்டா பகுதியைச் சோ்ந்த லட்சுமிநாராயணா (55) என்பதும், வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்றுவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டில் பதுக்கிவைத்திருந்த 200 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து, லட்சுமிநாராயணாவை கைது செய்தனா்.
தொடர்புடையது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த ஜொ்மன் சுற்றுலாப் பயணிகள்!
வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


