மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநகராட்சி சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2026, 1:10 am

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநகராட்சி சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

ஒசூா் பேருந்து நிலையம் அருகே ரூ. 19.5 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் சென்னத்தூா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 20.12 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ்,, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்து இனிப்புகள் வழங்கினா்.

இதில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் முகமது சபீா் ஆலம், சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.