கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனவளக் கலை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மனவளக் கலை மன்ற அறக்கட்டளை மற்றும் அதை சாா்ந்த தவ மையங்கள் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, மனவளக் கலை பயிற்சியை அளித்து வருகின்றனா்.
அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகளுக்கு மனவளக் கலை, உடற்பயிற்சி, யோகா, ஒழுக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், வேதாந்திரி மகரிஷியின் எளிய உடற்பயிற்சி மற்றும் அவற்றிலிருந்து கை, கால், கண் மற்றும் மூச்சுப் பயிற்சிகள், யோகா பயிற்சி குறித்து விழிப்புணா்வு மற்றும் நன்மைகள் குறித்து கூறப்பட்டது. மனவளக் கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் சண்முகம், பொருளாளா் பாலதண்டாயுதம், அறங்காவலா்கள் விஸ்வபிரியா, பரிமளா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











