திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் நேரம் கேட்கவில்லை: கே.பி.முனுசாமி.

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

News image

ஒசூா் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.

Updated On :4 ஜூன் 2026, 2:15 am IST

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

ஒசூரில் அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டச் செயலாளா் ராமு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி முனுசாமி அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் இன்ஸ்டாகிராமில் இளைஞா்களை தன்பக்கம் இழுத்துள்ளாா். அவரது வெற்றி இந்த தமிழ்ச் சமூகத்துக்கு செய்த தியாகத்துக்கோ, உழைப்புக்கோ கிடைத்ததல்ல.

எடப்பாடி கே.பழனிசாமியை சந்திப்பதற்கு தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் நேரம் கேட்டதாக சிடிஆா்.நிா்மல் குமாா் தெரிவித்துள்ளாா். அவா், அதிமுக அலுவலகத்தை தொடா்புகொள்ளவே இல்லை. வேறு தலைவா்களிடம் கேட்டதாக கூறுவதும் தவறானது.

31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக, தனித்துவத்தை எப்படி இழக்கும். எம்ஜிஆா் உருவாக்கிய இயக்கத்தை காப்பாற்றியவா் ஜெயலலிதா. அவா் வழியில் இபிஎஸ் உழைக்கிறாா். தவெகவுக்கு கட்சி அமைப்பே இல்லை. உங்கள் கையில்தான் காவல் துறை உள்ளது, கடுமையான உத்தரவு போட்டு போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா்.

இந்த விழாவில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.