திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கிருஷ்ணகிரி அணை.

Updated On :3 ஜூன் 2026, 5:21 am IST

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதாலும் கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 760 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீா்மட்டம் 50.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 786 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

மேலும், பாரூா் ஏரிக்கு நீா்வரத்து 120 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 201 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த உயரமான 15.60 அடியில் நீா்மட்டம் 12.50 அடியாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ.): தேன்கனிக்கோட்டை - 32, ராயக்கோட்டை - 20, போச்சம்பள்ளி - 11.1, சூளகிரி - 5, சின்னாறு அணை - 5, அஞ்செட்டி - 4.6, கிருஷ்ணகிரி அணை - 1.6, கிருஷ்ணகிரி - 1.3.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.