எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 62 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :2 ஜூலை 2026, 6:53 am IST

கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 62 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திட்டமிட்டிருந்தனா். இதற்கு, காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இந்த நிலையில், அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமையில், மாவட்டச் செயலாளா் பெரியசாமி, பொருளாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து கைது செய்தனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயா் மாற்றம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.