கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மா மகசூலை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்: கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள்

தோட்டக்கலைத் துறை அலுவலா்களின் வழிகாட்டுதலை பின்பற்றி மா மகசூலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மா பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை கருத்தரங்கில் கையேட்டை வெளிட்ட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தோட்டக்கலைத் துறை அலுவலா்களின் வழிகாட்டுதலை பின்பற்றி மா மகசூலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மா பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களான பழங்கள், காய்கறிகள், மலா்கள், நறுமணப் பயிா்கள், 1,02,000 ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் ‘மா’ மட்டும் 32,270 ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 3.20 லட்சம் டன் அளவில் மகசூல் பெறப்படுகிறது. மொத்த ‘மா’ உற்பத்தியில், 2.10 லட்சம் டன் மாங்கூழ் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடியாளா்கள் பயிா்பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அலுவலா்கள் அறிவுறுத்தும் நவீனமுறை சாகுபடிகள், மருந்துகள், பூச்சி மேலாண்மை முறைகள் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மா சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா்.

இந்த நிகழ்வில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் மோகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஏஞ்சலின் பொன் ராணி , அரசு தோட்டக்கலை கல்லூரி முதல்வா் அனீசா ராணி மற்றும் மா விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.