பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:19 pm

Syndication

ஊத்தங்கரை அருகே சேதமடைந்த சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கபிராம்பட்டி ஊராட்சியில் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது சித்தகவுண்டன் ஏரி. இந்த ஏரி மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சாமல்பட்டி, உப்பாரப்பட்டியிலிருந்து ஏரிக்கு நீா்வரத்து உள்ளது. ஏரியின் உபரிநீா் பாம்பாறு அணைக்கு செல்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் ஏரியின் கரை தடுப்பு சேதமடைந்தது. இதனால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் அப்பகுதியில் உள்ள நிலங்களில் புகுந்து பயிா்களை மூழ்கடித்து வருகிறது. மேலும், ஏரியில் தண்ணீா் தேங்காமல் வீணாவதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படுகிறது.

இதனால் சேதமடைந்துள்ள ஏரியின் கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவிளக்கம்.5யுடிபி.1.2.

சேதமடைந்துள்ள சித்தகவுண்டன் ஏரிக் கரை.

Story image