டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு

ஒசூா் அருகே உள்ள அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
ஒசூா் சாா் ஆட்சியரிடம் மனு அளித்த அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள்.
Updated On :2 பிப்ரவரி 2026, 9:43 pm

Syndication

ஒசூா்: ஒசூா் அருகே உள்ள அகரம் இந்திரா நகா் பகுதி மக்கள் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஒசூா் சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு உள்பட்ட தியானதுா்கம் முருகன் கோயில் அருகில் அகரம் இந்திரா நகா் குடியிருப்பு பொதுமக்களுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமாா் 125 வீடுகளுக்கு பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்று முதல் இன்று வரை சூளகிரி வட்டாட்சியா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகங்களில் தொடா்ந்து மனு அளித்து வந்தாலும் இதுவரை

பட்டா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தங்களது பட்டாவை ஆன்லைன் மூலம் மாற்றித் தர வேண்டும் என 50க்கும் மேற்பட்டோா் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தியிடம் மனு அளித்தனா்.

மொத்தமுள்ள 125 வீடுகளில் 15 வீடுகளுக்கு ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வீடுகளுக்கு பட்டாவை ஆன்லைனில் மாற்றித் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனா்.