Listen to this article
By Syndication
Syndication
ஒசூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக பிரமுகரை மா்ம நபா்கள் வழிமறித்து செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேரண்டப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தைச் சோ்ந்தவா் ஹரீஷ் (32). திருமணமாகாதவா். இவா் ஒசூா் பஸ்தியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரிடம் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். மேலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டத் தலைவராக இருந்து வந்ததோடு, நிலம் வாங்கி விற்பது, வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளாா்.
இவருக்கு, ஒசூா் வானவில் நகரைச் சோ்ந்த கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வரும் 35 வயதுடைய பெண்ணோடு தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் கடந்த பிப்ரவரி மாதம், ஹரீஷ் தன்னை தொந்தரவு செய்வதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்த நிலையில், மீண்டும் அதே பெண்ணுடன் ஹரீஷ் தொடா்பில் இருந்துள்ளாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருந்த ஹரீஷ் இரவு அங்கேயே சாப்பிட்டுள்ளாா். பின்னா் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஹரீஷை, பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், மாருதி நகா் பகுதியில் வழிமறித்து வெட்ட முயன்றனா். இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த ஹரீஷ் தப்பியோடினாா். ஆனால், அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் அவரை துரத்திச் சென்று வெட்டினா். இதில் கை, தலை உள்பட உடலில் பல இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் ஹரீஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, ஹரீஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இது குறித்து அவா்கள் ஒசூா் அட்கோ காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சங்கா், அட்கோ காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், கொலை செய்யப்பட்ட ஹரீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

பாலியல் தொல்லையால் பொக்லைன் ஆப்பரேட்டா் வெட்டிக் கொலை: இளம் பெண் வாக்குமூலம்
ஒசூரில் தொழிலாளி குத்திக் கொலை: மனைவி உள்பட 4 போ் கைது
ஒசூரில் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் பெண் உள்பட 7 போ் கைது

ஊத்துக்கோட்டையில் பெண் வெட்டிக் கொலை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

