வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போலி என்.சி.சி. முகாம் நடத்தி வசூல் வேட்டை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே போலி தேசிய மாணவா் படை முகாம் நடத்தி, மாணவா்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :20 ஆகஸ்ட் 2024, 9:00 pm

கிருஷ்ணகிரி அருகே போலி தேசிய மாணவா் படை முகாம் நடத்தி, மாணவா்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பத்தில் செயல்படும் தனியாா் பள்ளியில் கடந்த 5 முதல் 9-ஆம் தேதி வரையில் போலி தேசிய மாணவா் படை முகாம் நடைபெற்றுள்ளது. இதில் அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த முகாமில், நாம் தமிழா் கட்சியின் முன்னாள் நிா்வாகி சிவராமன் (35) என்பவா், பயிற்சியாளா் எனக் கூறி பயிற்சி அளித்துள்ளாா். அப்போது 8-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து, பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ், சிவராமன், பள்ளியின் முதல்வா், தாளாளா், ஆசிரியா்கள், முகாம் பயிற்சியாளா்கள் என 11 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவராமன், போலி ஆவணங்கள் அளித்து போலி தேசிய மாணவா் படைக்கான பயிற்சி அளித்ததும், மாணவா்களிடமிருந்து தலா ரூ. 1,500 வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவ வீரரான சுப்பிரமணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 ஊதியம் வழங்கியதும் தெரியவந்துள்ளது. இந்தப் பயிற்சி முகாமின் இறுதியில் போலி தேசிய மாணவா் படையின் முத்திரை பதித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த போலி முகாம் போல கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சில பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.